கடலூர்

ஆளுநருக்கு கருப்புக் கொடி: மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சியினர் கைது

DIN

சிதம்பரம்: சிதம்பரம் வந்த ஆளுநர் ஆர்.என். ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக் கொடி காட்டிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.

மார்க்சியத்தை விமர்சித்து பேசிய தமிழக ஆளுநர் ஆர்.என். ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து சிதம்பரத்திற்கு வந்த ஆளுநருக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தெற்குவீதியில் கருப்புக் கொடி காட்ட ஊர்வலமாக வந்து சிதம்பரம் தெற்குசன்னதி சந்திப்பில் கோஷமிட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலக்குழு உறுப்பினர் மூசா, எஸ்.ஜி.ரமேஷ்பாபு, ஆர்.ராமச்சந்திரன், நகரச் செயலாளர் ராஜா, நகர்மன்றத் துணைத் தலைவர் முத்துக்குமார் உள்பட 30 பேரை கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆர்.ராஜாராம் தலைமையிலான போலீஸார் வழிமறித்து கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கட்டுப்பாட்டினை ‘கறார்’ ஆக்கும் காவல்துறை!

பாலியல் குற்றவாளிக்கு 8 ஆண்டுகளுக்குப் பிறகு மரண தண்டனை!

கேரளத்தில் தொடரும் கனமழை: அனைத்து மாவட்டங்களிலும் கட்டுப்பாட்டு அறைகள் திறப்பு!

அகமதாபாத் விமான நிலையத்தில் 4 பயங்கரவாதிகள் கைது: சதி முறியடிப்பு!

கருடன் - நம்பிக்கையில் சூரி!

SCROLL FOR NEXT