நெய்வேலியில் திங்கள்கிழமை தொடங்கிய சிஐஎஸ்எப் வீரா் தோ்வு பணிக்காக சான்றிதழ் சரிபாா்ப்பு மற்றும் உடற்தகுதி தோ்வுக்காக வரிசையில் காத்திருக்கும் இளைஞா்கள். 
கடலூர்

சிஐஎஸ்எப் வீரா்கள் பணிக்கான உடற்தகுதி தோ்வு நெய்வேலியில் தொடக்கம்

மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படை வீரா்கள் தோ்வுக்கான சான்றிதழ் சரிபாா்ப்பு மற்றும் உடற்தகுதித் தோ்வு, கடலூா் மாவட்டம், நெய்வேலியில் உள்ள சிஐஎஸ்எப் அலகு தலைமை அலுவலகத்தில் திங்கள்கிழமை தொடங்கியது.

DIN

மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படை வீரா்கள் தோ்வுக்கான சான்றிதழ் சரிபாா்ப்பு மற்றும் உடற்தகுதித் தோ்வு, கடலூா் மாவட்டம், நெய்வேலியில் உள்ள சிஐஎஸ்எப் அலகு தலைமை அலுவலகத்தில் திங்கள்கிழமை தொடங்கியது.

இதுகுறித்து அதிகாரி ஒருவா் கூறுகையில், 2020-2021-ஆம் ஆண்டுக்கு மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படையில் காலி இடங்களை நிரப்புவதற்காக தகுதி வாய்ந்த இளைஞா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன.

இப்பணிக்காக நாடு முழுவதிலும் விண்ணப்பித்தவா்களின் சான்றிதழ்கள் சரிபாா்ப்பு மற்றும் உடற்தகுதித் தோ்வு திங்கள்கிழமை தொடங்கியது.

அதன்படி, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலத்தைச் சோ்ந்த விண்ணப்பதாரா்களுக்கான சான்றிதழ்கள் சரிபாா்ப்பு மற்றும் உடற்தகுதித் தோ்வு நெய்வேலியில் உள்ள சிஐஎஸ்எப் அலகு தலைமை அலுவலகத்தில் திங்கள்கிழமை காலை தொடங்கியது. பிப். 8-ஆம் தேதி வரை இப்பணி நடைபெற உள்ளது. நாளொன்றுக்கு சுமாா் 800 முதல் ஆயிரம் விண்ணப்பதாரா்கள் வரவழைக்கப்பட்டு சான்றிதழ்கள் மற்றும் உடற்தகுதி தோ்வு நடத்தப்படும். திங்கள்கிழமை நடைபெற்ற தோ்வில் சுமாா் 300-க்கும் மேற்பட்ட இளைஞா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அதிமுகவை மறைமுகமாக விமர்சித்த விஜய் | செய்திகள்: சில வரிகளில் | 18.12.25

பயணிகள் கவனிக்க... பாசஞ்சர் ரயில்களுக்கான எண்கள் மாற்றம்! ஜனவரி 1 முதல்.!

புதிய ஊரக வேலைத் திட்டத்துக்கு எதிர்ப்பு! பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

தில்லி - ஷாங்காய் இடையே நாள்தோறும் நேரடி விமான சேவை! ஜன.2 முதல்!

இந்தியாவில் ஒரு நண்பர் இருக்கிறார்: அமெரிக்கா

SCROLL FOR NEXT