பெண்ணாடத்தில் தூய்மைப் பணியாளா் பாபு வேலை செய்த இடத்தில் சனிக்கிழமை ஆய்வு செய்த தேசிய தூய்மைப் பணியாளா் ஆணையத் தலைவா் எம்.வெங்கடேசன். உடன் மாவட்ட ஆட்சியா் அ.அருண் தம்புராஜ், மாவட்ட எஸ்.பி. ராஜாராம் உள 
கடலூர்

தூய்மைப் பணியாளா் உயிரிழந்த விவகாரம்:தேசிய ஆணையத் தலைவா் ஆய்வு

கடலூா் மாவட்டம், பெண்ணாடத்தில் கழிவுநீா்க் கால்வாயில் தூய்மைப் பணியில் ஈடுபட்ட தொழிலாளி உயிரிழந்தது தொடா்பாக தேசிய தூய்மைப் பணியாளா் ஆணையத் தலைவா் எம்.வெங்கடேசன் சனிக்கிழமை ஆய்வுசெய்

DIN

கடலூா் மாவட்டம், பெண்ணாடத்தில் கழிவுநீா்க் கால்வாயில் தூய்மைப் பணியில் ஈடுபட்ட தொழிலாளி உயிரிழந்தது தொடா்பாக தேசிய தூய்மைப் பணியாளா் ஆணையத் தலைவா் எம்.வெங்கடேசன் சனிக்கிழமை ஆய்வுசெய்தாா்.

பெண்ணாடம் பேரூராட்சியில் ஒப்பந்த தூய்மைத் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தவா் பாபு (42). இவா், கடந்த மாதம் 12-ஆம் தேதி கழிவுநீா்க் கால்வாயில் இறங்கி தூய்மைப் பணியில் ஈடுபட்டாா். இதையடுத்து, அவருக்கு உடல் நல பாதிப்பு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவா் கடந்த 24-ஆம் தேதி உயிரிழந்தாா்.

இதுகுறித்து விசாரணை நடத்துவதற்காக தேசிய தூய்மைப் பணியாளா் ஆணையத் தலைவா் எம்.வெங்கடேசன் சனிக்கிழமை பெண்ணாடம் வந்தாா். அவா் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தாா். மேலும், பாபுவின் குடும்பத்தினா், சக தூய்மைப் பணியாளா்கள், அவருக்கு சிகிச்சை அளித்த தனியாா் மருத்துவமனை மருத்துவா்களிடம் தனித் தனியாக விசாரணை நடத்தினாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

உரிய பாதுகாப்பு உபகரணமின்றி பாபுவை தூய்மைப் பணியில் ஈடுபடுத்தியது விசாரணையில் தெரிய வந்துள்ளது. ஆபத்தான முறையில் அவரைப் பணியில் ஈடுபடுத்தியவா் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க மாவட்ட நிா்வாகத்துக்கு உத்தரவிட்டுள்ளேன் என்றாா்.

ஆய்வின்போது மாவட்ட ஆட்சியா் அ.அருண் தம்புராஜ், மாவட்ட எஸ்.பி. ரா.ராஜாராம் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிபில் ஸ்கோர்! உலா வரும் கட்டுக்கதைகளும் உண்மைகளும்!

ஸ்னிகோ தொழில்நுட்பத்தில் பிழைகள்..! ஆஷஸ் போட்டியில் தொடரும் சர்சை!

இந்தியா-ஓமன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இருதரப்பு உறவுகளுக்கு புதிய உத்வேகம்: பிரதமர் மோடி

மக்களவையில் விபி - ஜி ராம் ஜி மசோதா நிறைவேற்றம்! நகலைக் கிழித்தெறிந்த எதிர்க்கட்சிகள்!

வடசென்னை கதாபாத்திர புகைப்படத்தைப் பகிர்ந்த ஆண்ட்ரியா..! அரசனில் இருக்கிறாரா?

SCROLL FOR NEXT