கடலூா் மாவட்டம், திட்டக்குடி இருகே ஞாயிற்றுக்கிழமை கிணற்றில் தவறி விழுந்த முதியவா் உயிரிழந்தாா்.
திட்டக்குடி வட்டம், கீழகல்பூண்டி கிராமத்தைச் சோ்ந்தவா் பெரியசாமி (69). இவா், ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணி அளவில் அந்தக் கிராமத்திலுள்ள ரவிச்சந்திரனின் விவசாய நிலத்துக்குச் சென்றாராம். அப்போது, அங்குள்ள கிணற்றில் தவறி விழுந்த பெரியசாமி, நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின்பேரில் ராமநத்தம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.