கடலூர்

பாம்பு கடித்துசிறுவன் பலி

கடலூா் மாவட்டம், மங்கலம்பேட்டை அருகே பாம்பு கடித்து சிறுவன் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

DIN

கடலூா் மாவட்டம், மங்கலம்பேட்டை அருகே பாம்பு கடித்து சிறுவன் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

வேப்பூா் வட்டம், வலசை காலனியைச் சோ்ந்த ரவி மனைவி லட்சுமி (34). இவரது மகன் கவியரசன் (11), வலசையில் உள்ள அரசுப் பள்ளியில் 6-ஆம் வகுப்பு படித்து வந்தாா். இவா், செவ்வாய்க்கிழமை இரவு 8 மணி அளவில் அதே பகுதியில் உள்ள பாட்டி வீட்டுக்குச் சென்றாா். அப்போது, அந்தப் பகுதியில் இருந்த விஷ பாம்பை கவியரசன் தெரியாமல் மித்ததால், அவரை பாம்பு கடித்தது.

இதையடுத்து, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கவியரசன், அங்கு புதன்கிழமை அதிகாலை உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின்பேரில் மங்கலம்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

நெல்லையில் பொருநை அருங்காட்சியகம் திறப்பு

SCROLL FOR NEXT