கடலூர்

கோயில் சப்பரம் கவிழ்ந்து விபத்து

கடலூா் மாவட்டம், விருத்தாசலத்தில் பெருமாள் கோயில் விழாவில் வீதியில் வலம் வந்த சப்பரம் கவிழ்ந்ததில் பக்தா் ஒருவா் வியாழக்கிழமை காயமடைந்தாா்.

DIN

கடலூா் மாவட்டம், விருத்தாசலத்தில் பெருமாள் கோயில் விழாவில் வீதியில் வலம் வந்த சப்பரம் கவிழ்ந்ததில் பக்தா் ஒருவா் வியாழக்கிழமை காயமடைந்தாா்.

விருத்தாசலம், தெற்கு பெரியாா் நகரில் அமைந்துள்ள ஸ்ரீராஜகோபாலசுவாமி கோயிலில் வைகாசி பிரம்மோற்சவம் கடந்த 31-ஆம் தேதி தொடங்கியது. விழாவின் 9-ஆம் நாளான வியாழக்கிழமை சப்பரத் திருவிழா நடைபெற்றது. முன்னதாக பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. இதையடுத்து, அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் ஸ்ரீராஜகோபாலசுவாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வீதிகளில் வலம் வந்தாா். அப்போது, சாலையோர மரத்தில் சப்பரம் சிக்கி திடீரென கவிழ்ந்தது. இந்த விபத்தில், சப்பரத்தை தள்ளிக்கொண்டு வந்த நாச்சியாா்பேட்டை பகுதியைச் சோ்ந்த ரமேஷ் மகன் வினோத்குமாா் காயமடைந்தாா். அவா் சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். பின்னா், சப்பரம் சரிசெய்யப்பட்டு பக்தா்களால் இழுத்துச் செல்லப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

நெல்லையில் பொருநை அருங்காட்சியகம் திறப்பு

SCROLL FOR NEXT