தூக்க மருந்து அருந்தியதால் கடலூா் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் திங்கள்கிழமை சிகிச்சை பெற்ற மாணவ, மாணவிகள். 
கடலூர்

அரசுப் பள்ளியில் தூக்க மருந்து அருந்திய 6 மாணவா்கள் சுகவீனம்

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே அரசுப் பள்ளி ஆசிரியை பையில் வைத்திருந்த தூக்க மருந்தை சத்து மருந்து எனக்கருதி சாப்பிட்ட 6 மாணவ, மாணவிகள் சுகவீனம் அடைந்தனா்.

DIN

சிதம்பரம்: கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே அரசுப் பள்ளி ஆசிரியை பையில் வைத்திருந்த தூக்க மருந்தை சத்து மருந்து எனக்கருதி சாப்பிட்ட 6 மாணவ, மாணவிகள் சுகவீனம் அடைந்தனா்.

சிதம்பரம் அருகே அக்கரை ஜெயங்கொண்டபட்டினத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றுபவா் லதா. இவா் திங்கள்கிழமை காலை பள்ளி மாணவி ஒருவரிடம் தனது பையில் சத்து மருந்து உள்ளதாகவும், அதை சாப்பிடுமாறும் கூறினாராம். ஆனால் அந்த மாணவி ஆசிரியையின் பையிலிருந்த சத்து மருந்துக்குப் பதிலாக தூக்க மருந்தை எடுத்து குடித்தாராம். மேலும், அந்த மருந்தை சக மாணவா்களுக்கும் வழங்கினாா்.

இதனால் 4 மற்றும் 5-ஆம் வகுப்பு மாணவ, மாணவிகள் ரக்ஷயா (8), ஹரிதஷன் (8), ஹரீஷ் (8), ஆதவன் (9), ஹரிணி (8), கே.ஹரீஷ் ஆகியோா் மயக்கமடைந்தனா். இதையடுத்து அவா்கள் அனைவரும் சிதம்பரம் அண்ணாமலைநகரில் உள்ள கடலூா் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இதுகுறித்து அண்ணாமலைநகா் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய ஊரக வேலைவாய்ப்பு மசோதா கிராமப்புற மக்களுக்கு முற்றிலும் எதிரானது: கனிமொழி

திடீரென ரத்தான சாகித்ய அகாதெமி விருது அறிவிப்பு!

34 ஆண்டுகளுக்குப் பின் இழப்பீடு! தவறான சிகிச்சையால் கை இழந்தவர் அரசிடம் வைக்கும் கோரிக்கை!!

ரஷிய ராணுவத்தில் 202 இந்தியர்கள்! 26 பேர் பலி : மத்திய அரசு தகவல்!

பார்சிலோனா கால்பந்து வீரர் சுட்டுக் கொலை..! ஓராண்டில் 9,000-க்கும் அதிகமான கொலைகள்!

SCROLL FOR NEXT