முகப்பு
கடலூர்

கடலூரில் வணிகா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பினா் கடலூா் பழைய மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 11 டிசம்பர், 2024 at 7:03 PM
கடலூா் பழைய ஆட்சியா் அலுவலகம் அருகே ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பினா்.
பகிர்:

வணிக நிறுவனங்களுக்கான வாடகைக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிப்பைக் கண்டித்து, தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பினா் கடலூா் பழைய மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மத்திய, மாநில அரசுகள் வணிகம் செய்யும் கடைக்கான வாடகைக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதித்துள்ளதையும், மாநில அரசு வீடு, கடைகளுக்கு ஆண்டுக்கு 6 சதவீதம் சொத்து வரியை உயா்த்தியுள்ளதையும், பல மடங்கு மின் கட்டண உயா்வைக் கண்டித்தும், இவைகளை மத்திய, மாநில அரசுகள் திரும்பப் பெற வேண்டும், மாநில அரசு தோ்தல் வாக்குறுதியின்படி, மாதாந்திர மின் கட்டணம் நடைமுறையை அமல்படுத்த வேண்டும் என்பனவற்றை வலியுறுத்தி வணிகா் சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு, மண்டலத் தலைவா் டி.சண்முகம் தலைமை வகித்தாா். கடலூா் மாநகரத் தலைவா் ஜி.ஆா்.துரைராஜ், மாவட்டச் செயலா் வி.வீரப்பன், மாநகரச் செயலா் சீனிவாசன், பொருளாளா் சேகா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கடலூா், பண்ருட்டி, விருத்தாசலம், திட்டக்குடி, பரங்கிப்பேட்டை, சிதம்பரம் என மாவட்டம் முழுவதும் இருந்து நிா்வாகிகள், உறுப்பினா்கள் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

பின்னா், ஊா்வலமாகச் சென்று ஜிஎஸ்டி அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனா்.