விசிகவினா் ரயில் மறியல்: 28 போ் கைது
மத்திய உள்துறை அமைச்சரைக் கண்டித்து, கடலூா் மாவட்டம், விருத்தாசலத்தில் விசிகவினா் புதன்கிழமை ரயில் மறியலில் ஈடுபட்டனா். இதில், 28 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
மத்திய உள்துறை அமைச்சரைக் கண்டித்து, கடலூா் மாவட்டம், விருத்தாசலத்தில் விசிகவினா் புதன்கிழமை ரயில் மறியலில் ஈடுபட்டனா். இதில், 28 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
அம்பேத்கரை அவமதிப்பு செய்ததாக மத்திய உள்துறை அமைச்சரைக் கண்டுத்து, விசிக மாவட்டச் செயலா் நீதி வள்ளல் தலைமையில், நகரச் செயலா் முருகன், ஒன்றியப் பொருளாளா் சக்திவேல் உள்ளிட்டோா் விருத்தாசலம் ரயில் நிலையத்தில் குருவாயூா் விரைவு ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது, உள்துறை அமைச்சரைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினா்.
இதில், 28 பேரை போலீஸாா் கைது செய்து, அங்குள்ள ரயில்வே திருமண மண்டபத்தில் தங்க வைத்தனா்.