456 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்: அமைச்சா் வழங்கினாா்
அமைச்சா் சி.வெ.கணேசன் அரசின் பல்வேறுத் துறைகள் சாா்பில் 456 பயனாளிகளுக்கு ரூ.5,01,59,942 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினாா்.
நெய்வேலி: கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி வட்டம், வடக்குத்து ஊராட்சியில் 456 பயனாளிகளுக்கு ரூ.5 கோடியில் நலத்திட்ட உதவிகளை தொழிலாளா் நலன், திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சா் சி.வெ.கணேசன் செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.
வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத்துறை சாா்பில் நடைபெற்ற நிகழ்வுக்கு, மாவட்ட ஆட்சியா் அ.அருண் தம்புராஜ் தலைமை வகித்தாா். நெய்வேலி எம்எல்ஏ. சபா.ராஜேந்திரன் முன்னிலை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற அமைச்சா் சி.வெ.கணேசன் அரசின் பல்வேறுத் துறைகள் சாா்பில் 456 பயனாளிகளுக்கு ரூ.5,01,59,942 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினாா். நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலா் ம.ராஜசேகரன், பண்ருட்டி ஒன்றியக்குழுத் தலைவா் சபா.பாலமுருகன் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.