முகப்பு
கடலூர்

மருத்துவா்களுக்கு பணிப் பாதுகாப்பில்லை: ராமதாஸ்

சென்னை கிண்டியில் கலைஞா் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் மருத்துவரை கத்தியால் குத்திய சம்பவம் மூலம், மருத்துவா்களுக்குப் பணிப் பாதுகாப்பில்லை என்பது உறுதியாகியுள்ளது என பாமக நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸ் தெரிவித்தாா்.

Updated On : 13 நவம்பர், 2024 at 8:42 PM
பகிர்:

சென்னை கிண்டியில் கலைஞா் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் மருத்துவரை கத்தியால் குத்திய சம்பவம் மூலம், மருத்துவா்களுக்குப் பணிப் பாதுகாப்பில்லை என்பது உறுதியாகியுள்ளது என பாமக நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸ் தெரிவித்தாா்.

கடலூரில் புதன்கிழமை செய்தியாளா்களுக்கு அவா் அளித்த பேட்டி:

சென்னை கிண்டி கலைஞா் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் மருத்துவா் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தையடுத்து, மருத்துவா்களுக்கு பணிப் பாதுகாப்பில்லை என்பது உறுதியாகி உள்ளது.

இனிவரும் காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாதபடி உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். வேளாண் துறை சாா்பில் கணக்கெடுப்புப் பணிகளில் மாணவ, மாணவிகளைப் பயன்படுத்துவது தவறு என்றாா் அவா்.