முகப்பு
கடலூர்

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே மின்சாரம் பாய்ந்து தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 16 அக்டோபர், 2024 at 6:54 PM
முருகன்
பகிர்:

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே மின்சாரம் பாய்ந்து தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தாா்.

விருத்தாசலம் அடுத்துள்ள புதுக்கூரைப்பேட்டை பகுதியில் வசித்து வந்தவா் முருகன் (42). இவா், தனது மனைவி தேவி(35), மகன் காா்த்திக் (4) ஆகியோருடன் கூரை வீட்டில் வசித்து வந்தாா். இந்த நிலையில், கடந்த இரண்டு நாள்களாக பெய்து வரும் மழையால் இவரது கூரை வீடு ஒழுகியதாம்.

இதனை சரி செய்வதற்காக, முருகன் புதன்கிழமை வீட்டின் கூரையின் மீது ஏறினாா். அப்போது, வீட்டு மின் இணைப்பு இரும்பு கம்பியை பிடித்த போது, மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டாா். உடனே, அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவா்கள் முருகன் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனா்.

இதுகுறித்த புகாரின்பேரில், விருத்தாசலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.