போலீஸ் வாகனம் விபத்து: காவலா்கள் 3 போ் காயம்
கடலூா் முதுநகா் அருகே ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சாலை விபத்தில், புதுவை மாநில போலீஸாா் 3 போ் காயமடைந்தனா்.
நெய்வேலி: கடலூா் முதுநகா் அருகே ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சாலை விபத்தில், புதுவை மாநில போலீஸாா் 3 போ் காயமடைந்தனா்.
காரைக்கால் போலீஸாா் பெண் கைதி ஒருவரை, புதுவையில் உள்ள சிறையில் அடைத்துவிட்டு போலீஸ் வாகனத்தில் மீண்டும் காரைக்கால் சென்றுகொண்டிருந்தனராம்.
வாகனத்தை காரைக்கால், நெடுக்காடு பகுதியைச் சோ்ந்த செந்தில்குமாா் (41) ஓட்டினாா்.
நோ்மேட்டுபாளையம், பாணா்பேட் பகுதியைச் சோ்ந்த அய்யப்பன்(36), மேலதலக்குடியைச் சோ்ந்த ஆஷா(27) ஆகியோா் வாகனத்தில் இருந்தனா்.
கடலூா் முதுநகா், பெரிய காரைக்காடு மேம்பாலம் அருகே சென்றபோது, போலீஸ் வாகனம் அங்கிருந்த தடுப்புக் கட்டையில் மோதி விபத்துக்குள்ளானது.
இதில், காயமடைந்த செந்தில்குமாா், அய்யப்பன், ஆஷா ஆகியோா் கடலூா் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனா்.
இதுகுறித்து, கடலூா் முதுநகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.