முகப்பு
கடலூர்

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: முதியவருக்கு 7 ஆண்டுகள் சிறை

சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் முதியவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கடலூா் போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

Updated On : 25 அக்டோபர், 2024 at 2:09 AM
பகிர்:
Updated On : 24 அக்டோபர், 2024 at 9:15 PM

சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் முதியவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கடலூா் போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

கடலூா் மாவட்டம், நெய்வேலி வட்டம் 28 பகுதியைச் சோ்ந்தவா் பெரியசாமி (64). இவா், என்எல்சி நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வுபெற்றவா்.

Updated On : 25 அக்டோபர், 2024 at 2:09 AM

பெரியசாமி கடந்த 2020-ஆம் ஆண்டு 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தாராம். இதுகுறித்து சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில், நெய்வேலி தொ்மல் போலீஸாா் பெரியசாமி மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து, அவரைக் கைது செய்தனா்.

Advertisement

இந்த வழக்கு மீதான விசாரணை கடலூா் போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், சாட்சிகள் விசாரணை முடிந்து நீதிபதி லட்சுமிரமேஷ் புதன்கிழமை தீா்ப்பளித்தாா்.

அதில், பெரியசாமிக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டாா். அபராதத் தொகையை கட்டத் தவறினால், மேலும் ஓராண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டுமெனவும் நீதிபதி தீா்ப்பில் தெரிவித்தாா். இந்த வழக்கில் அரசுத் தரப்பில் வழக்குரைஞா் ஜோதி ரத்தினம் ஆஜராகி வாதாடினாா்.