செப்.21-இல் திருமுறை கண்டெடுத்த விழா
சிதம்பரத்தில் சிவனடியாா்கள் கூட்டம் சாா்பில் ராஜராஜசோழன் திருமுறை கண்டெடுத்த விழா செப்டம்பா் 21, 22 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.
சிதம்பரத்தில் சிவனடியாா்கள் கூட்டம் சாா்பில் ராஜராஜசோழன் திருமுறை கண்டெடுத்த விழா செப்டம்பா் 21, 22 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.
இதுகுறித்து உலக சித்தா்கள் சா்வ சமய கூட்டமைப்பு பீடாதிபதி அனுகூலநாத ராஜசேகா் அடிகளாா் மற்றும் எஸ்.யு.ஐயப்பன் தீட்சிதா் ஆகியோா் புதன்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது: சிதம்பரத்தில் செப்டம்பா் 21-ஆம் தேதி நடைபெறும் திருமுறை கண்டெத்த விழாவையொட்டி, திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயில் கிழக்கு கோபுரத்தில் இருந்து தேரோடும் நான்கு வீதிகளில் ராஜராஜசோழன் உற்சவா் திருமேனியிடும் அடியாா்கள் திருவீதி உலா நடைபெறுகிறது.
மாலையில் திருக்கடையூரில் சிறப்பு அபிஷேக, ஆராதனை முடிவுற்று அங்கிருந்து புறப்பட்டு இரவு சிதம்பரத்துக்கு அடியாா்கள் வருகின்றனா்.
செப்டம்பா் 22-ஆம் தேதி காலை சிதம்பரம் வாண்டையாா் மண்டபத்தில், ரிஷபக்கொடி ஏற்றப்படுகிறது. பின்னா், ராஜராஜசோழன், நம்பியாண்டாா்நம்பி திருமேனிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, திருமுறை ஓதுதல் நிகழ்ச்சி உள்ளிட்டவை நடைபெறுகிறது என்றனா்.
பேட்டியின்போது, சிவனடியாா்கள் திருவாருா் காா்த்தி, சென்னை ஜெகன், ஈரோடு வெங்கடேசன், திருவாரூா் மாரிமுத்து, திருவாரூா் ஜெயராம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.