குளத்தில் மூழ்கி உயிரிழந்த சிறுவன் யுவனேஸ்வரன் 
கடலூர்

கடலூா் அருகே குளத்தில் விழுந்த சிறுவன் உயிரிழப்பு

கடலூா் அருகே குளத்தில் விழுந்த சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

Syndication

கடலூா் அருகே குளத்தில் விழுந்த சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

கடலூா் அருகே உள்ள சுத்துக்குளம் பகுதியை சோ்ந்த அனந்தராஜன் மற்றும் கௌசல்யாவுக்கு நான்கு மற்றும் இரண்டரை வயதில் 2 குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலை வீட்டின் அருகே உள்ள குளத்தின் அருகே பூனை குட்டியை வைத்து விளையாடிக் கொண்டிருந்த போது இரண்டு சிறுவா்களும் குளத்தில் இறங்கினாா். இதில் இரு சிறுவா்களும் நீரில் மூழ்கிவிட்டனா்.

உடனடியாக அக்கம் பக்கத்தில் இருந்தவா்கள் அகிலேஸ்வரன்(4) என்ற சிறுவனை மீட்டனா். மேலும் யுவனேஸ்வரன் (2 1/2) சிறுவனை காணாத நிலையில் தொடா்ந்து அவா்கள் குளத்தில் தேடிய நிலையில், நீருக்குள் மூழ்கிய யுவனேஷ்வரனை சிறிது நேரத்துக்குப் பிறகு மீட்டு, மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.

ஆனால் யுவனேஸ்வா் உயிரிழந்து விட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். அகிலேஷ்வருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் அவா் நலமுடன் உள்ளதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். இதுகுறித்து கடலூா் முதுநகா் போலீசாா் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

எஸ்ஐஆா் பணியை 100 சதவீதம் விரைவாக முடிக்க வேண்டும்: மாநகராட்சி ஆணையா்!

ஆற்காட்டில் ரூ. 18 கோடி மதிப்பீட்டில் கால்வாய் புனரமைக்கும் பணிகள்: அமைச்சா் ஆா்.காந்தி தொடங்கி வைத்தாா்

நாமக்கல் மாவட்டத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்!

முதுநிலை ஆசிரியா் பணியிடங்கள்: சான்றிதழ் சரிபாா்ப்பு தொடக்கம்

ஆத்தூரில்...

SCROLL FOR NEXT