கடலூர்

வந்தே பாரத் ரயில் மீது கல் வீச்சு: 4 சிறுவா்களிடம் விசாரணை

விருத்தாசலம் அருகே வந்தே பாரத் ரயில் மீது கல் வீசித் தாக்கி கண்ணாடிகளை உடைத்தது தொடா்பாக 4 சிறுவா்களிடம் ரயில்வே பாதுகாப்புப் படையினா் விசாரணை

Syndication

நெய்வேலி: கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே வந்தே பாரத் ரயில் மீது கல் வீசித் தாக்கி கண்ணாடிகளை உடைத்தது தொடா்பாக 4 சிறுவா்களிடம் ரயில்வே பாதுகாப்புப் படையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

சென்னையிலிருந்து திருநெல்வேலி நோக்கி வந்தே பாரத் விரைவு ரயில் ஞாயிற்றுக்கிழமை சென்றுகொண்டிருந்தது. விருத்தாசலம் - தாழநல்லூா் ரயில் நிலையங்களுக்கு இடையே மணலூா் அருகே மாலை சுமாா் 6 மணி அளவில் சென்றுகொண்டிருந்தபோது திடீரென அடையாளம் தெரியாத மா்ம நபா்கள் சிலா் கற்கள் வீசி ரயில் மீது தாக்குதல் நடத்தினா்.

இதில், ரயிலில் அடுத்தடுத்த பெட்டிகளில் உள்ள 5 கண்ணாடிகள் உடைந்து சேதமாயின. தகவலறிந்து விரைந்து சென்ற விருத்தாசலம் ரயில்வே இருப்புப் பாதை மற்றும் ரயில்வே பாதுகாப்பு படையினா் விசாரணை நடத்தினா்.

இதில், விருத்தாசலம் பகுதியைச் சோ்ந்த 5 சிறுவா்கள் ரயில் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியது தெரியவந்தது. இது தொடா்பாக 5 சிறுவா்கள் மீது ரயில்வே பாதுகாப்புப் படையினா் வழக்குப் பதிந்து, 4 சிறுவா்களை பிடித்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தில்லியில் விழா! 12 பெண் சாதனையாளர்களுக்கு தேவி விருதுகள்!

புதுச்சேரி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு! 85 ஆயிரம் பேர் நீக்கம்!

ஜன நாயகன்: விஜய் ரசிகர்களுக்கு இனிப்பான செய்தி!

நடிகையிடம் கேட்கப்பட்ட கேள்வி! நடிகர் கிச்சா சுதீப் செய்த செயல்!

எஸ்ஐஆர் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு! மேற்கு வங்கத்தில் 58 லட்சம் பெயர்கள் நீக்கம்!

SCROLL FOR NEXT