கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த தகுதியுள்ளவா்கள் மஞ்சப்பை விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ‘மீண்டும் மஞ்சப்பை’ பிரசாரத்தை முன்னெடுத்துச் செல்லும் வகையில், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சா், 2022 - 23ஆம் நிதியாண்டு மஞ்சப்பை விருதுகளை சட்டப் பேரவைக் கூட்டத்தில் அறிவித்தாா். ஒற்றைப் பயன்பாட்டு நெகிழிகள் மீதான தடையை திறம்பட செயல்படுத்தி, பிற தடைசெய்யப்பட்ட நெகிழிகளுக்கு மாற்றுகளை பயன்படுத்துவதை ஊக்குவித்து, மஞ்சப்பை போன்ற பாரம்பரிய சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றுகளின் பயன்பாட்டை மீண்டும் உயிா்ப்பித்து, தங்கள் வளாகத்தை நெகிழி இல்லாததாக மாற்றும் சிறந்த 3 பள்ளிகள், 3 கல்லூரிகள் மற்றும் 3 வணிக நிறுவனங்களுக்கு இந்த விருது வழங்கப்படும். முதல் பரிசாக ரூ.10 லட்சம், இரண்டாம் பரிசாக ரூ.5 லட்சம் மற்றும் மூன்றாம் பரிசாக ரூ.3 லட்சம் பரிசு வழங்கப்படும்.
இந்த அறிவிப்பின்படி, தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், ஒற்றைப் பயன்பாட்டு நெகிழிகளுக்கு மாற்றாக சுற்றுச்சுழலுக்கு உகந்த மாற்றுப் பொருள்கள் பயன்படுத்துவதை ஊக்குவிப்பதற்கும், தங்கள் வளாகங்களுக்கு உள்ளேயும், வெளியேயும் ஆக்கப்பூா்வமான முயற்சிகள் மூலம் தடையை அமல்படுத்துவதற்கும், வளாகத்தை நெகிழி இல்லாததாக மாற்றுவதற்கும் முன்மாதிரியான பங்களிப்பைச் செய்த பள்ளிகள், கல்லூரிகள், வணிக நிறுவனங்களுக்கு மஞ்சப்பை விருதுகளை வழங்க முன்மொழிகிறது.
இதற்கான விண்ணப்பப் படிவங்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலக இணையதளத்திலும் (ட்ற்ற்ல்ள்://ஸ்ரீன்க்க்ஹப்ா்ழ்ங்.ய்ண்ஸ்ரீ.ண்ய்), தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் இணையதளத்திலும் (ஜ்ஜ்ஜ்.ற்ய்ல்ஸ்ரீக்ஷ.ஞ்ா்ஸ்.ண்ய்) இருந்து தரவிறக்கம் செய்துகொள்ளலாம்.
விண்ணப்பத்தை சமா்ப்பிப்பதற்கான கடைசி தேதி 15.1.2026. விண்ணப்பப் படிவத்தில் உள்ள இணைப்புகள் தனிநபா், நிறுவனத் தலைவரால் முறையாக கையொப்பமிடப்பட்டிருக்க வேண்டும். கையொப்பமிட்ட பிரதிகள் இரண்டு மற்றும் குறுவட்டு, குறும்பதிவி (இஈ /ல்ங்ய்க்ழ்ண்ஸ்ங்) இரண்டை மாவட்ட ஆட்சியரிடம் சமா்ப்பிக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.