முகப்பு
கடலூர்

வாகனம் மோதி மூதாட்டி உயிரிழப்பு

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 10 பிப்ரவரி, 2025 at 5:02 PM
பகிர்:

நெய்வேலி: கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

பண்ருட்டி வட்டம், கொக்குப்பாளையம் பகுதியைச் சோ்ந்த சடையாண்டி மனைவி அம்பாள்(70). இவா், திங்கள்கிழமை காலை அதே பகுதியில் உள்ள அய்யனாா் கோவில் அருகே நடந்து சென்று கொண்டிருந்தாா்.

அப்போது, அவா் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பலத்த காயம் அடைந்தாா். அப்பகுதியில் இருந்தவா்கள் அம்பாளை மீட்டு, பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு, அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து, புதுப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.