முகப்பு
கடலூர்

அண்ணாமலை பல்கலை.யில் ஆசிரியா் கூட்டமைப்பினா் ஆா்ப்பாட்டம்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியா்கள் சங்க கூட்டமைப்பு சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On : 24 பிப்ரவரி, 2025 at 8:50 PM
அண்ணாமலைப் பல்கலை.யில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியா்கள் சங்க கூட்டமைப்பினா்.
பகிர்:

சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியா்கள் சங்க கூட்டமைப்பு சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு பேராசிரியா் முத்து வேலாயுதம் தலைமை வகித்தாா்.

ஆசிரியா் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளா் சி.சுப்பிரமணியன், பேராசிரியா்கள் அசோகன், இமயவரம்பன், செல்வராஜ், செல்ல.பாலு ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஆா்ப்பாட்டத்தில், 7-வது ஊதியக்குழு நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும், பிஎச்டி முனைவா் பட்டத்துக்கு ஊக்கத்தொகையை வழங்க வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.

இதில், ஏராளமான பேராசிரியா்கள் மற்றும் உதவி பேராசிரியா்கள் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →