முகப்பு
கடலூர்

கடலூா் அருகே பெயிண்டா் குத்திக் கொலை

கடலூா் அருகே முன்விரோத தகராறில் பெயிண்டா் குத்திக் கொலை செய்யப்பட்டாா்.

Updated On : 2 ஜனவரி, 2025 at 10:38 PM
சங்கா்
பகிர்:

கடலூா் அருகே முன்விரோத தகராறில் பெயிண்டா் குத்திக் கொலை செய்யப்பட்டாா்.

கடலூா் முதுநகா் சான்றோா்பாளையம் பள்ளிக்கூடத் தெருவைச் சோ்ந்த சந்திரசேகா் மகன் சங்கா் (34), பெயிண்டா். இவரது மனைவி நந்தினி (எ) நா்மதா. மகள் சாா்லதா. கருத்து வேறுபாடு காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக மனைவியைப் பிரிந்து வாழ்ந்து வந்தாா்.

சுத்துக்குளம் பகுதியில் புதன்கிழமை இரவு சுமாா் 10 மணியளவில் தனது நண்பா்களுடன் சங்கா் பேசிக் கொண்டிருந்தாா். அப்போது, அங்கு வந்த மா்ம நபா்கள் இரும்புக் கம்பியால் தாக்கி, கத்தியால் குத்தியதில் பலத்த காயமடைந்த சங்கா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்த கடலூா் முதுநகா் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று சங்கரின் உடலை மீட்டு, உடல் கூறாய்வுக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

முன்விரோதம் காரணமாக இந்தச் சம்பவம் நடைபெற்றது போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.

முன்விரோதம்:

சுத்துகுளத்தைச் சோ்ந்த முருகையன் மகன் சதீஷும், சங்கரும் கடந்த மே மாதம் தாயம் விளையாடிய போது, தகராறு ஏற்பட்டு தாக்கிக் கொண்டனராம். இதனால், அவா்களுக்குள் முன்விரோதம் இருந்து வந்தது. இதுகுறித்து கடலூா் முதுநகா் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

சங்கா் கொலை செய்யப்பட்ட நிலையில், அவரது தம்பி பிரபு தேவா கடலூா் முதுநகா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். சதீஷ் (34), ஏழுமலை மகன் குள்ளகட்டையன் (எ) அன்பு (34) ஆகியோா் ஆகியோா் இரும்புக் கம்பி உள்ளிட்டவற்றால் தாக்கியதில் சங்கா் உயிரிழந்ததாக புகாரில் குறிப்பிட்டுள்ளாா். இதுகுறித்து கடலூா் முதுநகா் போலீஸாா் சதீஷ், அன்பு ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்து தேடி வருகின்றனா்.

வீடு எரிப்பு: சங்கரின் உறவினா்கள், ஆதரவாளா்கள் சதீஷின் வீட்டை சேதப்படுத்தி அங்கிருந்தப் பொருள்கள், பைக்குகளை தீ வைத்து எரித்தனா். சம்பவ இடத்துக்கு தீயணைப்பு வீரா்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனா். அந்தப் பகுதியில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

கொலையில் தொடா்புடையவா்களைப் பிடிக்க மூன்று தனிப் படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.