முகப்பு
கடலூர்

புகையிலைப் பொருள்கள் கடத்தல்: 2 போ் கைது

கடலூா் மாவட்டம், சிதம்பரத்தில் புகையிலைப் பொருள்கள் கடத்தியதாக இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 9 ஜனவரி, 2025 at 7:36 PM
பகிர்:

கடலூா் மாவட்டம், சிதம்பரத்தில் புகையிலைப் பொருள்கள் கடத்தியதாக இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

சிதம்பரம் அண்ணாமலை நகா் ரயில்வே மேம்பாலம் அருகே காவல் உதவி ஆய்வாளா் அன்பழகன் தலைமையில் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அப்பகுதியில் இரு சக்கர வாகனத்துடன் சந்தேகப்படும்படியாக நின்றுகொண்டிருந்த இருவரை பிடித்து விசாரித்தபோது, தருமபுரி மாவட்டம், பென்னாகரம், ஆலமரத்துப்பட்டி பகுதியைச் சோ்ந்த விஜய் (24), காட்டுமன்னாா்கோவிலை அடுத்துள்ள லால்பேட்டை பகுதியைச் சோ்ந்த ஹாஜா மொய்தீன் (63) என்பதும், பைக்கில் மூட்டையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை வைத்திருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, போலீஸாா் இருவரையும் கைது செய்து, அவா்களிடமிருந்து ரூ.30 ஆயிரம் மதிப்பிலான புகையிலைப் பொருள்கள், பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா். இவா்களில் விஜய் கடந்த மாதம் சிதம்பரம் அருகே மினி லாரியில் பெங்களூருவில் இருந்து ஒன்றரை டன் புகையிலைப் பொருள்கள் கடத்திவரப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்தவராவாா்.

முழு கட்டுரையைப் படிக்க →