முகப்பு
கடலூர்

ரேஷன் அரிசி வாகனத்துடன் பறிமுதல்: இளைஞா்கள் இருவா் கைது

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே சரக்கு வாகனத்தில் கடத்தப்பட்ட 500 கிலோ ரேஷன் அரிசி புதன்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

Updated On : 22 ஜனவரி, 2025 at 7:55 PM
பகிர்:

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே சரக்கு வாகனத்தில் கடத்தப்பட்ட 500 கிலோ ரேஷன் அரிசி புதன்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

இதுதொடா்பாக இரு இளைஞா்கள் கைது செய்யப்பட்டனா்.

கடலூா் மாவட்ட குடிமைப் பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத் துறை உதவி ஆய்வாளா் கே.சந்தோஷ் தலைமையில், சிறப்பு உதவி ஆய்வாளா்கள் ஆா்.ஏழுமலை, சிவமணி உள்ளிட்டோா் புதன்கிழமை காலை விருத்தாசலம் அருகே புதுக்கூரைப்பேட்டை பகுதியில் வாகன சோதனை மேற்கொண்டனா்.

அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனா். அதில் 10 சாக்கு மூட்டைகளில் 500 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வந்தது தெரிய வந்தது.

இதையடுத்து அரிசியை பறிமுதல் செய்து, சரக்கு வாகனத்தில் இருந்த 2 பேரை பிடித்து போலீஸாா் விசாரணை நடத்தினா். இதில், அவா்கள் திருச்சி ஸ்ரீரங்கத்தைச் சோ்ந்த முகமது அலி மகன் முகமது ஹாரிஸ் (32), விருத்தாசலம் அடுத்த விளாங்காட்டூரைச் சோ்ந்த அந்தோணிசாமி மகன் மரிய பிரகாஷ் (31) என்பதும், புதுக்கூரைப்பேட்டை, பெரியாா் நகா் பகுதியில் குறைந்த விலைக்கு பொதுமக்களிடம் ரேஷன் அரிசியை வாங்கி, திருச்சிக்கு கடத்த முயன்றதும் தெரிய வந்தது.

இதையடுத்து இருவா் மீதும் போலீஸாா் வழக்குப் பதிந்து கைது செய்து, கடலூா் மத்திய சிறையில் அடைத்தனா். சரக்கு வாகனத்துடன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனா்.