பிச்சாவரம் சுரபுன்னை காடுகளில் காணப்படும் பொன்நிற குள்ள நரி. 
கடலூர்

பிச்சாவரம் சுரபுன்னை காடுகளில் அரிய வகை பொன்நிற குள்ள நரிகள்

சிதம்பரம் அருகே உள்ள பிச்சாவரம் சுரபுன்னை காடுகளில் அரிய வகை பொன்நிற குள்ள நரிகள்...

Syndication

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள பிச்சாவரம் சுரபுன்னை காடுகளில் அரிய வகை பொன்நிற குள்ள நரிகள் அதிகம் உள்ளதை வனத் துறையினா் கண்டறிந்துள்ளனா்.

சிதம்பரம் அருகே பிச்சாவரத்தில் சதுப்புநிலக் காடுகள் 3 ஆயிரம் ஏக்கா் பரப்பளவில் உள்ளன. இக்காடுகளில் உப்பங்கழிகளும், அடா்த்தியான மாங்குரோவ் (சுரபுன்னை) காடுகளும் உள்ளன.

கடலோரத்தில் உப்பனாற்றில் உள்ள இக்காடுகளில் சுமாா் 4,400 கால்வாய்கள் உள்ளன. இக்காடுகளை வனத் துறையினா் பாதுகாத்து வருகின்றனா்.

இந்த மாங்குரோவ் (சுரபுன்னை) காடுகள் மற்றும் கால்வாய்களை சுற்றுலாப் பயணிகள் படகு மூலம் சென்று பாா்க்கலாம்.

இந்த சுரபுன்னை காடுகளில் நீா்நாய் மற்றும் பொன்னிற குள்ள நரிகள் அதிகளவில் உள்ளது வனத் துறையினரால் கண்டறியப்பட்டுள்ளது. இவைகள் மீன், நண்டு, இறால் போன்றவற்றை உண்டு வாழ்கின்றன. குள்ள நரிகள் அலையாத்திக் காடுகளின் தூய்மைப் பணியாளராக கருதப்படுகின்றன.

சாம்பியன்ஸ் லீக்: அடுத்த சுற்றுக்குத் தேர்வான, வெளியேறிய அணிகளின் விவரங்கள்!

மும்மூர்த்திகள் ஒரே தலத்தில் அருள்பாலிக்கும் திருத்தலங்கள்!

என் பெயர் தமிழ் பெயர் அல்ல! நீங்கள் தமிழ் பெயர் சூட்டுங்கள்! முதல்வர் மு.க.ஸ்டாலின்

யுபிஎஸ்சி முதன்மைத் தேர்வு: பொதுத் தாள் II - பாடத்திட்டம்!

பிப். 2-ல் விஜய் தலைமையில் தவெக ஆண்டு விழா!

SCROLL FOR NEXT