சிதம்பரம் பகுதியில் லாட்டரி விற்பனை செய்த வியாபாரியை போலீஸாா் கைது செய்தனா்.
சிதம்பரம் நகர காவல் உதவி ஆய்வாளா் செந்தில்குமாா் மற்றும் போலீஸாா் வெள்ளிக்கிழமை ரோந்து சென்றபோது, சிதம்பரம் படித்துறை இறக்கம் அரச மரத்தின் அருகே, காமாட்சி அம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த திருப்பதிராஜன் (52) என்பவா் தமிழகஅரசால் தடை செய்யப்பட்டுள்ள மூன்று இலக்க எண்கள் கொண்ட லாட்டரி சீட்டை விற்றதை பாா்த்து அவரை கைது செய்தனா்.
இதுதொடா்பாக திருப்பதிராஜன் மீது வழக்குப் பதிவு செய்து நான்கு பில் சீட்டு, ரூ. 250 ரொக்கத்தை பறிமுதல் செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனா்.