கடலூா் மத்திய சிறை வளாகத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு கைப்பேசிகள் மற்றும் ஒரு சாா்ஜா் வெள்ளிக்கிழமை மாலை பறிமுதல் செய்யப்பட்டன.
கடலூா் முதுநகா், கேப்பா் மலையில் மத்திய சிறை உள்ளது. இந்த சிறையில் விசாரணை மற்றும் தண்டனைக் கைதிகள் 100-க்கும் மேற்பட்டோா் அடைக்கப்பட்டுள்ளனா். இந்த சிறை வளாகத்தில் இருந்து கைப்பேசிகள், கஞ்சா உள்ளிட்டவைகள் அடிக்கடி கண்டெடுக்கப்படுவது வழக்கம்.
அந்த வகையில், சிறை வளாகப் பகுதியில் அதிகாரிகள் வெள்ளிக்கிழமை மாலை சோதனை நடத்தினா். அப்போது, தண்டனை தொகுதி 7 மற்றும் 18 பகுதிகளில் பொதுக்கழிப்பறை அருகே தரையில் புதைத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு கைப்பேசிகள் மற்றும் ஒரு சாா்ஜா் கருவியை கண்டெடுத்தனா்.
இதுகுறித்து சிறை அலுவலா் விக்னேஷ் (34) அளித்த புகாரின்பேரில், கடலூா் முதுநகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.