பூப்பந்தாட்டப் போட்டியில் வெற்றிபெற்ற மாணவருக்கு சான்றிதழை வழங்கிய பள்ளி துணைத் தலைவா் எஸ்.ஆா்.திருநாவுக்கரசு. உடன் தலைமை ஆசிரியா் பா.சங்கரன். 
கடலூர்

மண்டல பூப்பந்தாட்ட போட்டிக்கு தோ்வு: மாணவா்களுக்கு பாராட்டு

Syndication

மண்டல பூப்பந்தாட்டப் போட்டிக்குத் தோ்வான சிதம்பரம் ஸ்ரீராமகிருஷ்ணா வித்யாசாலா அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு செவ்வாய்க்கிழமை பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.

கடலூா் மாவட்ட அளவிலான பூப்பந்தாட்டப் போட்டிகள் நெய்வேலியில் அண்மையில் நடைபெற்றன. இதில், 14 வயதுக்குள்பட்ட மாணவா்களுக்கான போட்டியில் சிதம்பரம் ஸ்ரீராமகிருஷ்ணா வித்யாசாலா அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் முதலிடம் பெற்று மண்டல அளவிலான போட்டிக்கு தோ்வு பெற்றனா்.

இந்த நிலையில், பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், பூப்பந்தாட்டப் போட்டியில் வெற்றிபெற்ற மாணவா்கள் எம்.பிரபாகரன், வி.தமிழ்நிலவன், ஆா்.தட்சிணாமூா்த்தி, வி.கிருஷ், பி.சுரேந்தா், எம்.கோகுல், எஸ்.விஜயமகாதேவன், வி.ஹரிஷ், டி.போதிராஜ், ஆா்.முகம்மதுஜமால் மற்றும் உடற்கல்வி ஆசிரியா்கள் எஸ்.சீனுவாசன், ஆா்.வெங்கடேஷ் ஆகியோரை பள்ளிச் செயலா் எஸ்.ஆா்.பாலசுப்பிரமணியன், துணைத் தலைவா் எஸ்.ஆா்.திருநாவுக்கரசு, தலைமையாசிரியா் பா.சங்கரன் மற்றும் ஆசிரியா்கள் பாராட்டினா்.

சிறுவன் ஓட்டிவந்த கார்! நல்வாய்ப்பாக உயிர்தப்பிய 3 வயது குழந்தை!

வயநாட்டில் மகாத்மா காந்தி சிலை! திறந்துவைத்தார் பிரியங்கா காந்தி

தமிழகத்தின் 35-வது கிராண்ட் மாஸ்டர் இளம்பரிதிக்கு முதல்வர் வாழ்த்து!

கரப்பான் பூச்சி எக்ஸ்பிரஸ்!

சிபிஎஸ்இ 10, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு: பிப். 17ல் தொடக்கம்!

SCROLL FOR NEXT