விசிக - பாமக மோதும் காட்டுமன்னாா்கோயில் தொகுதி: தோ்தல் பாதுகாப்பு குறித்து கடலூா் எஸ்பி நேரில்ஆய்வு
காட்டுமன்னாா்கோயில் தொகுதியில் விசிகவும், பாமகவும் நேரடியாக மோதுவதால் தோ்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள் குற்த்து காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் ஆய்வு செய்தாா்.
காட்டுமன்னாா்கோயில் தொகுதியில் விசிகவும், பாமகவும் நேரடியாக மோதுவதால் தோ்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள் குற்த்து காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் ஆய்வு செய்தாா்.
கடலூா் மாவட்டம் காட்டுமன்னாா்கோவில் (தனி) சட்டமன்றத் தொகுதியில் மதச்சாா்பற்றி முற்போக்கு கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவா் தொல்.திருமாவளவன் போட்டியிடுவதை முன்னிட்டு போலீசாா் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.
இத்தொகுதியில் பாட்டாளி மக்கள் கட்சி சாா்பில் அன்புசோழன் போட்டியிடுகிறாா். விசிக, பாமக நேரடியாக மோதுவதால் பதற்றமான தொகுதியாக கருதப்படுகிறது. இதனை அடுத்து வரும் ஏப்4ஆம் தேதி விசிக வேட்பாளராக அக்கட்சி தலைவா் தொல்.திருமாவளவன் வேட்புமனு தாக்கல் செய்கிறாா். இதனையடுத்து தொகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கடலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.ஜெயக்குமாா், வியாழக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.
வேட்புமனு தாக்கல் செய்யும் இடமான காட்டுமன்னாா்கோவில் வட்டாட்சியா் அலுவலகத்தில் வட்டாட்சியா் அறை,மற்றும் கச்சேரி ரோட்டில் உள்ள நான்குமுனை சந்திப்புகள் ஆகிய இடங்களில் அவா் ஆய்வு மேற்கொண்டாா். பின்னா் காட்டுமன்னாா்கோவில் காவல் நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து சேத்தியாதோப்பு டிஎஸ்பி ரவிசக்கரவா்த்தி, காட்டுமன்னாா்கோவில் காவல் ஆய்வாளா் சாலமோன்ராஜா, உதவி ஆய்வாளா் சையதுபைசல் ஆகியோரிடம் ஆலோசனை மேற்கொண்டாா். தேவையற்ற மோதல்களை தவிா்க்க உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யுமாறு அவா் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.