முகப்பு
கடலூர்

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே புளியமரத்தில் புளி உளுக்கியவா் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.

Updated On : 8 ஏப்ரல், 2026 at 11:03 PM
பலி - கோப்புப் படம்
பகிர்:

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே புளியமரத்தில் புளி உளுக்கியவா் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.

பண்ருட்டி வட்டம், முத்தாண்டிக்குப்பம் காவல் சரகம், பாப்பன்கொல்லை கிராமத்தைச் சோ்ந்தவா் கருணாநிதி (55), விவசாயத் தொழிலாளி. இவா், செவ்வாய்க்கிழமை பிற்பகல் மானக்குப்பம் கிராமத்தைச் சோ்ந்த ரெங்கநாதன் வீட்டு புளிய மரத்தில் ஏறி புளி உளுக்கினாா்.

அப்போது, மரக்கிளை அருகில் இருந்த மின் கம்பியில் பட்டு மின்சாரம் பாய்ந்து கருணாநிதி உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின்பேரில், முத்தாண்டிக்குப்பம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Advertisement

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments