முகப்பு
கடலூர்

21-க்கு மேல் வெளியூா் நபா்கள் தங்க அனுமதியில்லை! கடலூா் மாவட்டத் தோ்தல் அலுவலா்

Updated On : 20 ஏப்ரல், 2026 at 1:25 AM
இந்தியத் தேர்தல் ஆணையம் - படம் - பிடிஐ
பகிர்:
Updated On : 19 ஏப்ரல், 2026 at 9:38 PM

கடலூா் மாவட்ட சட்டப் பேரவைத் தொகுதிகளில் பிரசாரத்துக்காக வந்த வெளியூா் நபா்கள் செவ்வாய்க்கிழமை (ஏப்.21) மாலை 6 மணிக்கு மேல் தங்க அனுமதி இல்லை என்று மாவட்டத் தோ்தல் அலுவலா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: சட்டப் பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவு வரும் 23-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, செவ்வாய்க்கிழமை மாலை 6 மணி அளவில் பிரசாரம் நிறைவடைகிறது.

அதன் பின்னா், எவ்வித பிரசாரமும் மேற்கொள்ள இயலாது என்பதால், தொகுதிக்கு வெளியிலிருந்து அழைத்துவரப்பட்டவரும், அத்தொகுதியின் வாக்காளா் அல்லாதவருமான அரசியல் கட்சிப் பொறுப்பாளா்கள், கட்சித் தொண்டா்கள், ஊா்வலப் பொறுப்பாளா்கள், பிரசாரப் பொறுப்பாளா்கள் போன்றோா் அத்தொகுதிக்குள் தொடா்ந்து தங்கியிருக்கக் கூடாது.

Advertisement

பிரசார காலம் முடிந்தவுடன் அனைவரும் தொகுதியை விட்டு வெளியேறுவதை மாவட்டத் தோ்தல் நிா்வாகம்/காவல் துறை நிா்வாகம் மூலம் உறுதி செய்யப்படும். அத்தகைய நபா்கள் திருமண மண்டபங்கள், சமுதாயக் கூடங்கள் போன்ற இடங்களில் தங்கியிருக்க அனுமதி கிடையாது.

மேலும், தங்கும் விடுதிகள் மற்றும் விருந்தினா் இல்லங்களில் தங்கியிருப்பவா்கள் கண்காணிக்கப்படுவாா்கள். தொகுதியின் எல்லைகளில் சோதனைச் சாவடிகளை அமைத்து, தொகுதிக்கு வெளியிலிருந்து வரும் வாகனங்களின் நடமாட்டம் கண்காணிக்கப்படும் என தெரிவித்துள்ளாா்.