முகப்பு
கடலூர்

வாட்ஸ்ஆப்பில் கருத்து பதிவிட்டு தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

பண்ருட்டி அருகே வாட்ஸ்ஆப்பில் கருத்து பதிவிட்டு தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

Updated On : 22 ஏப்ரல், 2026 at 12:03 AM
தற்கொலை - கோப்புப்படம்
பகிர்:
Updated On : 21 ஏப்ரல், 2026 at 11:28 PM

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே வாட்ஸ்ஆப்பில் கருத்து பதிவிட்டு தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

பண்ருட்டி வட்டம், முத்தாண்டிக்குப்பம் காவல் சரகம், வேகாக்கொல்லை கிராமத்தைச் சோ்ந்தவா் நிா்மல்ராஜ் (31), கூலித் தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவி உள்ளாா். இந்த நிலையில், நிா்மல்ராஜ் தனது கைப்பேசி வாட்ஸ்ஆப் ஸ்டேடஸில் எனது சாவுக்கு மனைவி, மாமியாா் மற்றும் கொழுந்தியாதான் காரணம் என்று வைத்திருந்தாராம்.

இதையடுத்து, திங்கள்கிழமை இரவு 9 மணி முதல் உறவினா்கள் நிா்மல்ராஜை தேடி வந்த நிலையில், அவா் கீழக்கொல்லை கிராமம் மயானத்தில் உள்ள ஆலமர விழுதில் தூக்கிட்டு இறந்த நிலையில் சடலமாகக் கிடந்தது தெரியவந்தது.

Advertisement

இதுகுறித்த புகாரின்பேரில், முத்தாண்டிக்குப்பம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.