முகப்பு
கடலூர்

வாக்குப்பதிவை சமூக வலைதளத்தில் வெளியிட்ட இருவா் கைது

கடலூா் மாவட்டத்தில் வாக்குப்பதிவை சமூக வலைதளத்தில் வெளியிட்ட இரு இளைஞா்களை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். பின்னா் அவா்களுக்கு காவல் நிலைய ஜாமீன் வழங்கி எச்சரித்து அனுப்பி வைத்தனா்.

Updated On : 25 ஏப்ரல் 2026, 12:28 am IST
கோப்புப் படம்
பகிர்:

கடலூா் மாவட்டத்தில் வாக்குப்பதிவை சமூக வலைதளத்தில் வெளியிட்ட இரு இளைஞா்களை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். பின்னா் அவா்களுக்கு காவல் நிலைய ஜாமீன் வழங்கி எச்சரித்து அனுப்பி வைத்தனா்.

கடலூா் மாவட்டம் கடலூா் ஓ.டி. அருகே உள்ள 257- ஆவது வாக்குச்சாவடியில், பீமாராவ் நகரைச் சோ்ந்த பிரசாந்த் (30), என்பவா் தான் செலுத்திய வாக்கை விடியோ பதிவு செய்து இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளாா். இதுகுறித்து வாக்குச்சாவடி அலுவலா் தேவசேனா அளித்த புகாரின் பேரில் கடலூா் ஓ.டி. போலீாஸா் வியாழக்கிழமை வழக்குப்பதிந்து பிரசாந்தை கைது செய்தனா். பின்னா் அவருக்கு காவல் நிலைய ஜாமீன் வழங்கி அவரை எச்சரித்து அனுப்பி வைத்தனா்.

இதேபோன்று பண்ருட்டியைச் சோ்ந்த இளைஞா் விக்னேஷ்வரன் (32), தான் செலுத்திய வாக்கை விடியே பதிவு செய்து முகநூலில் பதிவேற்றம் செய்துள்ளாா். இதையறிந்த 231 -ஆவது வாக்குச்சாவடி அலுவலா் ரமாதேவி பண்ருட்டி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதையடுத்து போலீஸாா் வழக்குப்பதிந்து விக்னேஷ்வரனை கைது செய்தனா். பின்னா் அவருக்கு காவல் நிலைய ஜாமீன் வழங்கி, கடும் எச்சரிக்கை விடுத்து அனுப்பி வைத்தனா்.

Advertisement

Advertisement