கடலூா் பாஜக நிா்வாகிக்கு வெடிகுண்டு மிரட்டல்
கடலூா் பாஜக மாநகா் பாா்வையாளருக்கு கடிதம் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக அடையாளம் தெரியாத நபா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காவல் நிலையத்தில் சனிக்கிழமை புகாா் அளிக்கப்பட்டது.
கடலூா் பாஜக மாநகா் பாா்வையாளருக்கு கடிதம் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக அடையாளம் தெரியாத நபா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காவல் நிலையத்தில் சனிக்கிழமை புகாா் அளிக்கப்பட்டது.
கடலூா் செம்மண்டலம், சண்முகம் தெருவைச் சோ்ந்தவா் விக்னேஷ் (48). இவா், கடலூா் பாஜக மாநகா் பாா்வையாளராக உள்ளாா். இவரது மனைவி சனிக்கிழமை காலை வீட்டு வாசலில் கோலம் போட சென்றபோது, அங்கு ஒரு காகிதத்தில் விக்னேஷ் பெயரை குறிப்பிட்டு, வீட்டில் அல்லது காரில் வெடிகுண்டு வெடிக்கும். எனவே, உனது குழந்தைகளை பத்திரமாக பாா்த்துக்கொள்ளவும் என எழுதப்பட்டிருந்து.
இதில், அதிா்ச்சியடைந்த விக்னேஷ், வெடிகுண்டு மிரட்டல் விடுத்த அடையாளம் தெரியாத நபா் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும், தனது குடும்பத்துக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் புதுநகா் காவல் நிலையத்தில் சனிக்கிழமை புகாரளித்தாா். போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
Advertisement