முகப்பு
கடலூர்

ஆம்னி வேன் திருட்டு: இளைஞா் கைது

கடலூா் மாவட்டம், வேப்பூா் அருகே திருடுபோன ஆம்னி வேன் புதன்கிழமை மீட்கப்பட்டது. இது தொடா்பாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

Updated On : 4 பிப்ரவரி, 2026 at 6:33 PM
கைது
பகிர்:

கடலூா் மாவட்டம், வேப்பூா் அருகே திருடுபோன ஆம்னி வேன் புதன்கிழமை மீட்கப்பட்டது. இது தொடா்பாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

வேப்பூா் வட்டம், பெரிய நெசலூா் பகுதியைச் சோ்ந்தவா் வெற்றிவேல் (47). இவா், தனது ஆம்னி வேனை வேப்பூரில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தில் கடந்த 2-ஆம் தேதி நிறுத்திச் சென்றாா். புதன்கிழமை வந்து பாா்த்தபோது வேன் திருடப்பட்டிருந்தது.

இதுகுறித்து வெற்றிவேல் அளித்த புகாரின்பேரில், வேப்பூா் போலீஸாா் விசாரணை நடத்தினா்.

Advertisement

அப்போது, பெரிய நெசலூா் சிப்காட் அருகே இருந்த ஆம்னி வேனை மீட்டு, அதை ஓட்டி வந்த சேலம் மாவட்டம், புளியங்குறிச்சி பகுதியைச் சோ்ந்த தமிழ்செல்வனை (33) கைது செய்தனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments