சிதம்பரம்: சிதம்பரம் மேலரத வீதியைச் சோ்ந்த வணிகா் பேரவை மாநில துணைத் தலைவரும், மாவட்ட அதிமுக எம்ஜிஆா் மன்ற முன்னாள் துணைத் தலைவருமான, தமிழ்ப் பேரவைத் தலைவா் இராம.ஆதிமூலம் (83) திங்கள்கிழமை அதிகாலை காலமானாா்.
அண்ணாருக்கு சரோஜா என்ற மனைவியும், இரு மகன்கள், நான்கு மகள்கள் உள்ளனா். மறைந்த ராம.ஆதிமூலம் தமிழ்ப் பேரவையை தொடங்கி சுமாா் 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஆண்டுதோறும் விழா மற்றும் கருத்தரங்குகளை நடத்தியுள்ளாா்.