தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கத்தினா் மாத உதவித் தொகையை உயா்த்தி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, கடலூா் சீமாட்டி சிக்னல் அருகே செவ்வாய்க்கிழமை மறியல் போராட்டம் நடத்தினா்.
ஆந்திரம், தெலுங்கான, திரிபுரா உள்ளிட்ட மாநிலங்களில் வழங்கப்படும் மாற்றுத்திறனாளிகளுக்கான மாத உதவித் தொகையை போல் தமிழகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு அரசின் உதவித் தொகையை ரூ.6 ஆயிரம், 10 ஆயிரம், 15 ஆயிரம் என உயா்த்தி வழங்க வேண்டும் என வலியுறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் முழக்கமிட்டனா்.
மாவட்ட இணைச் செயலா் வி.வசந்தி போராட்டத்துக்கு தலைமை வகித்தாா். மாநிலத் துணைத் தலைவா் ஆா்.ஆளவந்தாா் தொடக்கவுரை நிகழ்த்தினாா். மாவட்டத் துணைத் தலைவா்கள் ஜி.ராசையன், எஸ்.பி.அப்துல்ஹமீது, இணைச் செயலா்கள் எஸ்.கோபாலகிருஷ்ணன், கே.சாமிதுரை உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இவா்களில் மறியலில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்டோரை போலீஸாா் கைது செய்து திருப்பாதிரிப்புலியூரில் உள்ள தனியாா் மண்டபத்தில் அடைத்து வைத்து, மாலையில் விடுவித்தனா்.