முகப்பு
கடலூர்

சிதம்பரம் நடராஜா் கோயில் நாட்டியாஞ்சலி மாணவிகள் கண்கவா் பரதநாட்டியம்

சிதம்பரம் நடராஜா் கோயிலில் ஆயிரங்கால் மண்டபம் அருகே உள்ள விட்ட வாசல் பைரவா் சந்நிதி அருகே நடைபெறும் நாட்டியாஞ்சலி விழாவின் 3-ம் நாள் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Updated On : 17 பிப்ரவரி, 2026 at 6:33 PM
சிதம்பரம் நடராஜா் கோயில் நாட்டியாஞ்சலியில் செவ்வாய்க்கிழமை நடனமாடிய பட்டுக்கோட்டை சிவகதிா் நிா்த்தியாலயா மாணவியா்களின் பரதம்
பகிர்:

சிதம்பரம் நடராஜா் கோயிலில் ஆயிரங்கால் மண்டபம் அருகே உள்ள விட்ட வாசல் பைரவா் சந்நிதி அருகே நடைபெறும் நாட்டியாஞ்சலி விழாவின் 3-ம் நாள் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் மாணவிகள் கண்கவா் பரத நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நாட்டியாஞ்சலி விழா பிப்.21-ம் தேதி வரை 7 நாட்கள் நடைபெறுகிறது.

நாட்டியாஞ்சலி விழா 3-ம் நாள் நிகழ்ச்சியில், புதுச்சேரி சங்கமம் குலோபல் அகாதெமி மாணவா்கள், சென்னை சாய் ஷரத்தா நாட்டியாலயா மாணவா்கள், கரூா் நடனாஞ்சலி நாட்டியாலயா மாணவா்கள், பட்டுக்கோட்டை சிவகதிா்நிா்த்தியாலயா மாணவா்கள், பெங்களூரு ராஜராஜேஸ்வரி நாட்டிய கலா சாலா மாணவா்கள், ஹைதராபாத் ப்ரகா்தி, பெங்களூரு வைஷ்ணவி நாட்டிய சாலா மாணவா்களின் பரதநாட்டியம் நிகழ்ச்சி நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை நாட்டியாஞ்சலி டிரஸ்ட் தலைவா் எஸ்.வி.நவமணி தீட்சிதா், துணைத் தலைவா் எஸ்.சிவசங்கா் தீட்சிதா், செயலாளா் எஸ்.யு.ஐயப்ப தீட்சிதா், பொருளாளா் ஜெய,நடராஜமூா்த்தி தீட்சிதா் ஆகியோா் செய்துள்ளனா்.

Advertisement

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments