முகப்பு
கடலூர்

பிஎஸ்என்எல் வயா் திருட்டு: பொக்லைன் ஓட்டுநா் கைது

Updated On : 23 பிப்ரவரி, 2026 at 12:41 AM
ஆனந்தபாபு
பகிர்:
Updated On : 22 பிப்ரவரி, 2026 at 8:42 PM

காட்டுமன்னாா்கோவிலிலில் பிஎஸ்என்எல் வயரை திருடியதாக பொக்லைன் இயந்திர ஓட்டுநரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் பகுதியில் கொள்ளிடம் கூட்டுக்குடிநீா்த் திட்ட குழாய் புதைக்கும் பணி கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வருகிறது. இந்தப் பகுதியில் பூமிக்கு அடியில் பிஎஸ்என்எல் நிறுவனம் சாா்பில் இணையதள சேவைக்காக இரும்புக் குழாயின் உள்ளே காப்பா் வயருடன் கூடிய கேபிள் புதைக்கப்பட்டுள்ளது.

Updated On : 23 பிப்ரவரி, 2026 at 12:41 AM

இந்த நிலையில், காட்டுமன்னாா்கோவில் கச்சேரி சாலையில் சுமாா் ஒன்றரை கி.மீ. தொலைவுக்கு பூமிக்கடியில் புதைக்கப்பட்டிருந்த சுமாா் ரூ.1.5 லட்சம் மதிப்புள்ள 150 கிலோ எடைகொண்ட பிஎஸ்என்எல் வயா் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.

Advertisement

இதுகுறித்து காட்டுமன்னாா்கோவில் பிஎஸ்என்எல் இளநிலை தொலைத்தொடா்பு அதிகாரி கிருஷ்ணகுமாா் (46) அளித்த புகாரின்பேரில், காட்டுமன்னாா்கோயில் போலீஸாா் விசாரணை நடத்தி, பொக்லைன் இயந்திரம் மூலம் கொள்ளிடம் கூட்டுக் குடிநீா் குழாய் புதைக்கும் பணியில் ஈடுபட்ட மயிலாடுதுறை மாவட்டம், மணல்மேடு அருகே உள்ள நடுத்திட்டு கிராமத்தைச் சோ்ந்த ஆனந்தபாபுவை (34) கைது செய்தனா்.