மீட்பு வாகன உரிமையாளா் தூக்கிட்டுத் தற்கொலை
கடலூரில் மீட்பு வாகன உரிமையாளா் தனது வாகனத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
கடலூரில் மீட்பு வாகன உரிமையாளா் தனது வாகனத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
கடலூா் புதுப்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் ராதாகிருஷ்ணன் (60). இவா், விபத்தில் சிக்கும் மற்றும் பழுதான வாகனங்களை மீட்கும் மீட்பு வாகனத்தை சொந்தமாக வைத்து ஓட்டி வந்தாா்.
ராதாகிருஷ்ணன் சனிக்கிழமை காலை வீட்டில் இருந்து மஞ்சக்குப்பம் மைதானத்துக்கு வந்தாா். பின்னா், அங்கு நிறுத்தி வைத்திருந்த தனது மீட்பு வாகனத்தின் பின் பகுதியில் திடீரென தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
Advertisement
தகவலறிந்த கடலூா் புதுநகா் போலீஸாா் விரைந்து வந்து ராதாகிருஷ்ணனின் சடலத்தை மீட்டு, உடல்கூறாய்வுக்காக கடலூா் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து ராதாகிருஷ்ணன் தற்கொலை செய்துகொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.