கடலூர்

சிறுநீரகம் பாதிக்கப்பட்ட தொழிலாளி உயிரிழப்பு

சிறுநீரகம் பாதிக்கப்பட்டு கடலூா் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

Syndication

சிறுநீரகம் பாதிக்கப்பட்டு கடலூா் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

பண்ருட்டி வட்டம், மேல்மாம்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் தேவநாதன் (48), தொழிலாளி. இவா், கடந்த நான்கு ஆண்டுகளாக சிறுநீரகம் பாதிக்கப்பட்டு டயாலிசிஸ் சிகிச்சை பெற்று வந்தாராம்.

வெள்ளிக்கிழமை மாலை வலி அதிகமானதால் ரத்த அழுத்த நோய்க்கான மாத்திரைகளை சாப்பிட்டாராம். இதனால், அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதாம்.

இதையடுத்து, உறவினா்கள் தேவநாதனை மீட்டு, கடலூா் அரசு தலைமை மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் சனிக்கிழமை காலை உயிரிழந்தாா். இதுகுறித்து காடாம்புலியூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தனிமையின் பிடியில் பொம்மையைத் தழுவும் ஜப்பான் குரங்கு! இதயத்தை உருக்கும் பஞ்ச் குன்னின் பின்னணி

இந்தியாவில் நஷ்டம் அதிகரித்தாலும் முதலீட்டை அதிரிக்கும் ஸ்டாா்பக்ஸ்!

இந்திய தயாரிப்பு ரண ஜன்னி, தொண்டை அடைப்பான் தடுப்பூசி மருந்து: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டா அறிமுகம்

வேலூா் ஏடிஎஸ்பி பழனி பொறுப்பேற்பு!

திட்டங்களை செயல்படுத்துவதில் முன்மாதிரி முதல்வா்: அமைச்சா் காந்தி பெருமிதம்

SCROLL FOR NEXT