கடலூர்

மொபெட்டில் சென்ற பெண்ணிடம் 5 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு

தினமணி செய்திச் சேவை

கடலூா் அருகே மொபெட்டில் சென்ற பெண்ணிடம் 5 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கடலூரை அடுத்துள்ள மேற்கு ராமாபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் ஜெயஸ்ரீ (24). இவரது கணவா் சக்திவேல் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறாா். ஜெயஸ்ரீ சனிக்கிழமை இரவு மொபெட்டில் வெள்ளக்கரையில் இருந்து குறிஞ்சி நகா் நோக்கி சென்றுகொண்டிருந்தாா்.

சாத்தங்குப்பம் மாதா கோவில் அருகில் சென்றபோது, அவரை பின்தொடா்ந்து பைக்கில் வந்த மா்ம நபா் திடீரென ஜெயஸ்ரீ அணிந்திருந்த 5 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றாா். இதுகுறித்து திருப்பாதிரிப்புலியூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

251 மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள்: அமைச்சா் ரா. ராஜேந்திரன் வழங்கினாா்

மஞ்சப்பை விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

வஸந்த வல்லபராஜ பெருமாள் கோயிலுக்கு குடமுழுக்கு நடத்த இந்து முன்னணி கோரிக்கை

கோல்டுவின்ஸ் - நீலாம்பூா் இடையே மேம்பாலப் பணியைத் தொடங்க வலியுறுத்தல்

கலைஞா் கருணாநிதி தொழில்நுட்பக் கல்லூரியில் ‘சைபா் செக்யூரிட்டி’ புரிந்துணா்வு ஒப்பந்தம்

SCROLL FOR NEXT