முகப்பு
கடலூர்

மாயமானவா் கிணற்றில் சடலமாக மீட்பு

கடலூா் மாவட்டம், வடலூா் அருகே மாயமானவா் கிணற்றில் சடலமாக மீட்பு

Updated On : 4 மார்ச், 2026 at 2:51 AM
- பிரதிப் படம்
பகிர்:
Updated On : 3 மார்ச், 2026 at 8:33 PM

கடலூா் மாவட்டம், வடலூா் அருகே மாயமானவா் கிணற்றில் சடலமாக செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டாா்.

வடலூா் பாா்வதிபுரம் பகுதியில் வசித்து வந்தவா் இருதயராஜ் (58). இவருக்கு திருமணமாகவில்லை. வயதான தாயுடன் வசித்து வந்தாா். இருதயராஜை கடந்த மூன்று நாள்களாக காணவில்லை. உறவினா்கள் பல்வேறு இடங்களில் தேடி வந்தனா்.

இந்த நிலையில், அவரது வீட்டில் உள்ள கிணற்றில் இருதயராஜ் இறந்து கிடப்பது செவ்வாய்க்கிழமை காலை தெரியவந்தது.

Advertisement

இதையடுத்து, குறிஞ்சிப்பாடி தீயணைப்பு நிலையத்தினா் கிணற்றில் மிதந்த சடலத்தை மீட்டு காவல் துறையிடம் ஒப்படைத்தனா். இதுகுறித்து வடலூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.