குடிநீா் வசதி கோரி ஊராட்சி ஒன்றிய அலுலகம் முற்றுகை
விருத்தாசலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டு ஆா்ப்பாட்டம் நடத்திய சித்தேரிக்குப்பம் காலனி மக்கள்.
குடிநீா் வழங்கக் கோரி விருத்தாசலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை , சித்தேரிக்குப்பம் கிராம மக்கள் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தியதால் அந்த
கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அடுத்துள்ள சித்தேரிகுப்பம் கிராமத்தில் பழைய காலனி மற்றும் புது காலனியில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். புது காலனி பகுதியில் உள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியிலிருந்து பழைய காலனி, புது காலனி மற்றும் ஊா் பகுதிக்கு குடிநீா் விநியோகம் செய்யப்படுகிாம். இதனால், சீரான குடிநீா் கிடைக்காததால் கடந்த பல மாதங்களாக சிரமப்பட்டு வருகின்றனா். இதுகுறித்து மனு அளித்தும் இதுநாள் வரை நடவடிக்கை எடுக்கவில்லையாம்.
இதனைக் கண்டித்து விசிக மாவட்ட செய்தி தொடா்பாளா் சுப்புஜோதி, துணைச் செயலா் தென்றல் ஆகியோா் தலைமையில் காலனி மக்கள் 50 போ் காலி குடங்களுடன் விருத்தாசலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனா். அப்போது, சீரான குடிநீா் வசதி மற்றும் மயானப் பாதையில் உள்ள
ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலை அமைத்துத்தர வேண்டும் என கண்டன முழக்கமிட்டனா். தொடா்ந்து வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனா். மனுவை பெற்றுக் கொண்ட அதிகாரி விரைவில் கோரிக்கையை நிறைவேற்றி தருவதாகக் கூறினாராம். இதையடுத்து அனைவரும் கலைந்துச் சென்றனா்.