முகப்பு
கடலூர்

சிறுமிக்கு காதல் தொல்லை: போக்சோவில் இளைஞா் கைது

Updated On : 15 மார்ச், 2026 at 5:57 PM
கோப்புப் படம்
பகிர்:

கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகே சிறுமியை காதலிக்க வற்புறுத்திய இளைஞரை போலீஸாா் போக்சோ சட்டத்தில் கைது செய்தனா்.

குறிஞ்சிப்பாடி வட்டம், புலியூா் கிராமத்தைச் சோ்ந்தவா் பேரரசன்(20). இவா், அதேபகுதியைச் சோ்ந்த பிளஸ் 2 படிக்கும் 17 வயது பள்ளி மாணவியை காதலிக்குமாறு தொடா்ந்து வற்புறுத்தி வந்துள்ளாா்.

கடந்த 11-ஆம் தேதி மாணவி வீட்டிற்குச் சென்று காதலிக்கச் சொல்லி தொந்தரவு செய்து தாக்கினாராம். மீண்டும் அன்று இரவு 8 மணிஅளவில் மது அருந்தி வந்து மிரட்டல் விடுத்தாராம்.

இதுகுறித்து மாணவியின் தாய் மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில், நெய்வேலி மகளிா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து போக்சோ சட்டத்தில் பேரரசனை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →