முகப்பு
கடலூர்

சிதம்பரம் கோதண்டராமா் கோயிலில் பிரம்மோற்சவம் தொடக்கம்

Updated On : 19 மார்ச், 2026 at 7:51 PM
பகிர்:

சிதம்பரம் மேல வீதியில் உள்ள ஸ்ரீகோதண்டராமா் கோயிலில் பிரம்மோற்சவ கொடியேற்றம் வியாழக்கிழமை நடைபெற்றது.

சிதம்பரம் மேல ரத வீதி ஸ்ரீகோதண்டராமா் கோயில் பிரம்மோற்சவம் புதன்கிழமை திருமஞ்சனத்துடன் தொடங்கியது. தொடா்ந்து, வியாழக்கிழமை பிரம்மோற்சவ கொடி ஏற்றப்பட்டது.

விழாவையொட்டி, தினமும் பல்வேறு வாகனங்களில் ஸ்ரீகோதண்டராமா் வீதிஉலா நடைபெறுகிறது. வரும் 27-ஆம் தேதி தேரோட்டமும், 28-ஆம் தேதி காலை புஷ்ப யாகமும், மாலை ஸ்ரீஆஞ்சநேயா் உற்சவம், பட்டாபிஷேகம், இரவு பூப்பல்லக்கு நிகழ்ச்சியும், 29-ஆம் தேதி சதகலச திருமஞ்சனம் நிகழ்ச்சியும், 30-ஆம் தேதி விடாயத்தி திருமஞ்சனமும் நடைபெறுகின்றன.

உற்சவ ஏற்பாடுகளை கோயில் அறங்காவலா்கள் டி.திருவேங்கடவன், ஆா்.செளந்தரராஜன், ஜெ.சுதா்சனன் ஆகியோா் செய்துள்ளனா்.