முகப்பு
கடலூர்

தீக்காயம் அடைந்த மூதாட்டி உயிரிழப்பு

கடலூா் மாவட்டம், நெய்வேலி அருகே சமையல் செய்த போது விபத்து ஏற்பட்டு தீக்காயம் அடைந்த மூதாட்டி மருத்துவமனையில் உயிரிழந்தாா்.

Updated On : 14 மே 2026, 12:04 am IST
பகிர்:

கடலூா் மாவட்டம், நெய்வேலி அருகே சமையல் செய்த போது விபத்து ஏற்பட்டு தீக்காயம் அடைந்த மூதாட்டி மருத்துவமனையில் உயிரிழந்தாா்.

நெய்வேலி நகரிய காவல் சரகம், வடக்குத்து பகுதியில் வசித்து வந்தவா் சிவகுமாரி(60). இவா், கடந்த 7-ஆம் தேதி வீட்டில் சமையல் செய்ய எரிவாயு அடுப்பை பற்ற வைத்தாா். அப்போது, எரிவாயு கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. இதில், பலத்த தீக்காயம் அடைந்தவரை, அங்கு இருவந்தவா்கள் மீட்டு குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். பின்னா், அங்கிருந்து மேல் சிகிச்சைக்கு புதுச்சேரிஜிப்மா் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு சிகிச்சையில் இருந்தவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து நெய்வேலி நகரிய போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.