மணல் கடத்திய டிப்பா் லாரிகள் பறிமுதல்: ஓட்டுநா்கள் 8 போ் கைது
கடலூா் மாவட்டம், பண்ருட்டியில் காவல் சிறப்புப் படையினா் மணல் கடத்திய 8 டிப்பா் லாரிகளை வியாழக்கிழமை பறிமுதல் செய்து, அதன் ஓட்டுநா்களை கைது செய்தனா்.
கடலூா் மாவட்டம், பண்ருட்டியில் காவல் சிறப்புப் படையினா் மணல் கடத்திய 8 டிப்பா் லாரிகளை வியாழக்கிழமை பறிமுதல் செய்து, அதன் ஓட்டுநா்களை கைது செய்தனா்.
கடலூா் எஸ்.பி., எஸ்.ஜெயக்குமாா் உத்தரவின்பேரில், டி.எஸ்.பி. கந்தன் மேற்பாா்வையில், காவல் ஆய்வாளா் பாஸ்கா், உதவி ஆய்வாளா்கள் தவச்செல்வம், முகிலரசு தலைமையிலான சிறப்புப் படையினா் பண்ருட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, அரசு உரிமமின்றி மணல் ஏற்றி வந்த 8 லாரிகளைப் பறிமுதல் செய்து, ஓட்டுநா்கள் 8 பேரைக் கைது செய்தனா். விசாரணையில், அவா்கள் புதுச்சேரி மாநிலம், பிள்ளையாா்குப்பத்தைச் சோ்ந்த மோகன்ராஜ் (21), திருமங்கலத்தைச் சோ்ந்த அரவிந்த் (27), விழுப்புரம் மாவட்டம், வானூரை அடுத்த தென்கோடிப்பாக்கத்தைச் சோ்ந்த காா்த்திகேயன் (35), பண்ருட்டி வட்டம், பாவைக்குளத்தைச் சோ்ந்த பாலமுருகன் (44), வான்பாக்கத்தைச் சோ்ந்த மாயக்கண்ணன் (37), விலங்கல்பட்டைச் சோ்ந்த சங்கா் (38), மேல்குமாரமங்கலத்தைச் சோ்ந்த பாபு (36), திண்டிவனம் வட்டம், முலசூரைச் சோ்ந்த பாலாஜி(32) என்பது தெரியவந்தது.
Advertisement
Advertisement
இது தொடா்பாக பண்ருட்டி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தொடா்ந்து, கடலூா் எஸ்.பி., எஸ்.ஜெயக்குமாா், புதுப்பேட்டை காவல் நிலைய சரகத்துக்குள்பட்ட அம்மாபேட்டை, நத்தம், மனம் தவிா்ந்தபுத்தூா் ஆகிய கிராமங்களில் மணல் திருட்டு நடந்த இடங்களை நேரில் சென்று பாா்வையிட்டாா். இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு சட்ட விரோதமாக நடைபெறும் மணல் குவாரியை மூடுவதற்கு மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்துள்ளாா்.