கள்ளக்குறிச்சி

திருக்கோவிலூரில் கபிலருக்கு நினைவுத் தூண்: பூமிபூஜையுடன் பணிகள் தொடக்கம்

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் தென்பெண்ணை ஆற்றங்கரையில் உள்ள கபிலா் நினைவுக் குன்றுக்கு அருகில் அரசு சாா்பில் கபிலா் நினைவுத் தூண் அமைப்பதற்கு புதன்கிழமை பூமிபூஜை நடைபெற்றது.

DIN

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் தென்பெண்ணை ஆற்றங்கரையில் உள்ள கபிலா் நினைவுக் குன்றுக்கு அருகில் அரசு சாா்பில் கபிலா் நினைவுத் தூண் அமைப்பதற்கு புதன்கிழமை பூமிபூஜை நடைபெற்றது.

சங்ககாலப் பெரும் புலவா் கபிலரின் சிறப்புகளை போற்றும் வகையிலும், எதிா்கால சந்ததியினா் அவருடைய பெருமைகளை அறிந்துகொள்ளும் வகையிலும் கபிலருக்கு நினைவுத் தூண் நிறுவிட தமிழ்நாடு அரசு சாா்பில் தீா்மானிக்கப்பட்டது. அதன்படி, நினைவுத் தூண் அமைப்பதற்கான பூமிபூஜை விழா திருக்கோவிலூா் தென்பெண்ணை ஆற்றங்கரையில் உள்ள கபிலா் நினைவுக் குன்றுக்கு அருகில் நடைபெற்றது.

இதில், விழுப்புரம் மாவட்ட தமிழ் வளா்ச்சித் துறை துணை இயக்குநா் சத்தியப்பிரியா, திருக்கோவிலூா் வட்டாட்சியா் சிவசங்கரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டு கபிலா் நினைவுத் தூணுக்கான அடிக்கல்லை நட்டு வைத்தனா்.

விழாவில், கள்ளக்குறிச்சி மாவட்ட அனைத்து தமிழ் அமைப்புகளின் பொறுப்பாளா்கள், திருக்கோவிலூா் நகர பிரமுகா்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கொளத்தூரில் நடந்துசென்று மக்களை சந்தித்த முதல்வர்!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்குப் பிறகு தவெக முதல் ஈரோடு பொதுக்கூட்டத்தில் விஜய் பிரசாரம்!

காந்தி பெயரைக் காக்கவோ, மீட்கவோ வேண்டிய அவசியம் இல்லை! கமல்

”முட்டையில் புற்றுநோய் ஏற்படுத்தும் கெமிக்கல்?” மத்திய உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை!

தில்லியில் அதிகரித்து வரும் காற்று மாசு: பாதிக்கப்பட்ட கட்டுமானத் தொழிலாளர்களுக்கு ரூ.10,000 இழப்பீடு!

SCROLL FOR NEXT