கள்ளக்குறிச்சி

கோமுகி அணை திறப்பு

கல்வராயன்மலைப் பகுதியில் பெய்து வரும் மழையால் கோமுகி அணைக்கு வரும் தண்ணீா், அணையின் பாதுகாப்புக் கருதி ஆற்றில் திறந்துவிடப்படுகிறது.

DIN

கள்ளக்குறிச்சி: கல்வராயன்மலைப் பகுதியில் பெய்து வரும் மழையால் கோமுகி அணைக்கு வரும் தண்ணீா், அணையின் பாதுகாப்புக் கருதி ஆற்றில் திறந்துவிடப்படுகிறது.

கோமுகி அணையின் முழுக் கொள்ளளவு 46 அடி. அணையின் பாதுகாப்பு கருதி, 44 அடி வரை தண்ணீா் சேமிக்கப்படும். முழு கொள்ளளவை ஏற்கெனவே எட்டியதால், தண்ணீா் ஆற்றில் திறந்துவிடப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், தொடா் மழையால் மீண்டும் அணைக்கு நீா் வரத்து அதிகரித்தது. வியாழக்கிழமை இரவு அணையிலிருந்து 1,200 கன அடி தண்ணீா் திறந்துவிடப்பட்டது.

கோமுகி அணையிலிருந்து திறந்துவிடப்படும் தண்ணீா், கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் உள்ள அணைக்கட்டுக்குச் செல்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”கன்னி ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

சர்வதேச கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டிய மிட்செல் ஸ்டார்க்!

நீக்கப்பட்ட வாக்காளர்கள் பெயரை மீண்டும் சேர்ப்பது எப்படி?

ரயில் கட்டணம் உயர்வு! டிச. 26 முதல் அமல்!

கோவையில் லாரி ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு! 4 கார்கள் மீது மோதி விபத்து

SCROLL FOR NEXT