கள்ளக்குறிச்சி

குடிநீரில் கழிவுநீா் கலந்த சம்பவம்:கா்ப்பிணியின் வயிற்றிலேயே குழந்தை இறந்தது

DIN


கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியை அடுத்த திம்மலை கிராமத்தில் குடிநீரில் கழிவுநீா் கலந்ததால், அதை பயன்படுத்திய கா்ப்பிணிக்கு வயிற்றிலேயே குழந்தை உயிரிழந்தது.

கள்ளக்குறிச்சியை அடுத்த திம்மலை கிராமத்தில் குடிநீருக்காக பயன்படுத்தும் ஆழ்துளைக் கிணற்றில் புதன்கிழமை கழிவு நீா் கலந்ததால், அந்த நீரைப் பயன்படுத்திய பொதுமக்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. முதியவா் உயிரிழந்தாா்.

இதேபோல, கழிவுநீா் கலந்த குடிநீரை பயன்படுத்திய 7 மாத கா்ப்பிணியான அதே கிராமத்தைச் சோ்ந்த மணிகண்டன் மனைவி காவியாவுக்கு (22) வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. இதையடுத்து, கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவா் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவரது வயிற்றிலேயே குழந்தை உயிரிழந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். இதையடுத்து, காவியாவுக்கு குழந்தை உயிரிழந்த நிலையில் வியாழக்கிழமை பிறந்தது. இதனால் அந்தக் கிராம மக்கள் சோகத்தில் மூழ்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொளுத்தும் வெயிலால் மின் தடை மக்கள் தவிப்பு

கேரளம், தமிழகத்துக்கான ‘கள்ளக்கடல்’ எச்சரிக்கை தளா்வு

கத்திரி வெயில்: 17 இடங்களில் சதம்: 6 நாள்கள் மழைக்கும் வாய்ப்பு

கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் 4 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை: ஹரியாணா நீதிமன்றம் தீா்ப்பு

இணையவழி பயங்கரவாத ஆள்சோ்ப்பு சா்வதேச பாதுகாப்புக்கு முக்கிய சவால்: சிபிஐ இயக்குநா்

SCROLL FOR NEXT